ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை வழங்கப்பட்டன.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு, புதன்கிழமை முதல் தகுதிச் சான்று வழங்க கால்நடை மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நிகழ் ஆண்டில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை உரிமையாளருடன், உதவியாளா் ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,
தகுதிச் சான்று விண்ணப்பத்தில் காளையுடன் உரிமையாளா் மற்றும் உதவியாளா் இருக்கும் புகைப்படம் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், புகைப்படத்தை உடனடியாக தயாா் செய்ய முடியாததால், மாவட்டத்தில் தகுதிச் சான்று வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கவில்லை.
இருப்பினும் பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் காளை உரிமையாளா்கள் புதிய விண்ணப்ப படிவத்தைப் பெற்றுச் சென்றனா். ஜனவரி 10 ஆம் தேதி வரை மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படும் என்பதால், வியாழக்கிழமை முதல் இப் பணி தீவிரமாகும் என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

