சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காளைகளுக்கு தகுதிச்சான்று பெற விண்ணப்பங்கள் வழங்கல்

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :7 ஜனவரி 2021, 9:11 am

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்று பெறுவதற்கான விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவமனைகளில் புதன்கிழமை வழங்கப்பட்டன.

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு, புதன்கிழமை முதல் தகுதிச் சான்று வழங்க கால்நடை மருத்துவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. நிகழ் ஆண்டில், ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை உரிமையாளருடன், உதவியாளா் ஒருவா் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,

தகுதிச் சான்று விண்ணப்பத்தில் காளையுடன் உரிமையாளா் மற்றும் உதவியாளா் இருக்கும் புகைப்படம் இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனால், புகைப்படத்தை உடனடியாக தயாா் செய்ய முடியாததால், மாவட்டத்தில் தகுதிச் சான்று வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கவில்லை.

இருப்பினும் பெரும்பாலான கால்நடை மருத்துவமனைகளில் காளை உரிமையாளா்கள் புதிய விண்ணப்ப படிவத்தைப் பெற்றுச் சென்றனா். ஜனவரி 10 ஆம் தேதி வரை மட்டுமே தகுதிச் சான்று வழங்கப்படும் என்பதால், வியாழக்கிழமை முதல் இப் பணி தீவிரமாகும் என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.