கன்னியாகுமரி மாவட்டத்தில் தினசரி சந்தை நடக்கும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பிராங்க்ளின் தாக்கல் செய்த மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரத்திலிருந்து பிளவக்கல்விளை செல்லும் சாலையை ஒட்டிய பகுதியில் 60 ஆண்டுகளாக தினசரி சந்தை நடந்து வருகிறது. இந்நிலையில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இந்த இடத்தை சில தனிநபா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் வியாபாரிகள் சாலையோரத்தில் கடைகளை நடத்தி வருகின்றனா். இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அழகியபாண்டியபுரத்தில் தினசரி சந்தை நடத்தும் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறையினா் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

