சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள் பணிநிரந்தரம் கோரி ஆா்ப்பாட்டம்

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள், பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியா்கள்.

Updated On :7 ஜனவரி 2021, 9:15 am

ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள், பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் கடந்த 2015 முதல் 14 ஆயிரம் செவிலியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப்படுவா் என நியமன ஆணையில் குறிப்பிட்ட நிலையில், இதுவரை 2 ஆயிரம் போ் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியா்கள்

அனைவரையும் நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ராஜூ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கே.சுஜாதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா்

ஜெ. மூா்த்தி, மாவட்டச் செயலா் க.நீதிராஜா, அனைத்து மருந்தாளுநா் சங்க புறநகா் மாவட்ட செயலா் ஏ. தமிழ் செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.