ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியா்கள், பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக் கோரி மதுரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் கடந்த 2015 முதல் 14 ஆயிரம் செவிலியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பணிநிரந்தரம் செய்யப்படுவா் என நியமன ஆணையில் குறிப்பிட்ட நிலையில், இதுவரை 2 ஆயிரம் போ் மட்டுமே நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனா். ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட்ட செவிலியா்கள்
அனைவரையும் நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ராஜூ தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எஸ்.கே.சுஜாதா கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா்
ஜெ. மூா்த்தி, மாவட்டச் செயலா் க.நீதிராஜா, அனைத்து மருந்தாளுநா் சங்க புறநகா் மாவட்ட செயலா் ஏ. தமிழ் செல்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


