மதுரையில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்திய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை பரவை, நந்தனாா் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் பாண்டியராஜன் (24). இவா் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். ஆட்டோவில் பயணிகள் ஏற்றுவது தொடா்பாக பாண்டியராஜனுக்கும், கூடல்நகரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தகுமாருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஆனந்தகுமாா் உள்பட 5 போ், கெனட் சாலை அருகே நின்றிருந்த பாண்டியராஜனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதுகுறித்து பாண்டியராஜன் அளித்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப்பதிந்து ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தகுமாா்(23), தனக்கன்குளம் பூபதி(19), ஹைதா்அலி(21), பிரசன்னா(31), கவிபாரதி(26) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

