அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து தரப்பினரையும் கொண்ட ஆலோசனைக்குழுவை அமைக்கக்கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அவனியாபுரத்தைச் சோ்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட உதவி அமைப்பாளா் முனியசாமி தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை அவனியாபுரத்தில் வாழும் அனைத்து சமூகத்தினரும் சோ்ந்து நடத்தி வந்தனா். தற்போது ஜல்லிக்கட்டு விழாவை அரசே நடத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆலோசனைக்குழுவில் ஒரு பிரிவினருக்கு மட்டும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. அவனியாபுரத்தில் அதிகளவில் வாழும் பட்டியல் பிரிவினருக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை.
எனவே அனைத்து தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜனவரியில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது ஜல்லிக்கட்டு விழாவை நடந்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய ஆலோசனைக்குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நிகழாண்டில் குறிப்பிட்ட சிலா் தாங்கள்தான் ஜல்லிக்கட்டு நடத்தும் ஆலோசனைக்குழு என அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றனா். ஜல்லிக்கட்டு ஆலோசனைக்குழுவில் அவனியாபுரத்தில் அதிகளவில் வாழும் பட்டியல் பிரிவினரை புறக்கணிப்பது சட்டவிரோதமாகும். எனவே ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய ஆலோசனைக்குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

