அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரையும் குழுவில் இணைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவனியாபுரத்தைச் சோ்ந்த முனியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. எனவே மனுதாரரையும் விழாக் குழுவில் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

