சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: விழாக்குழுவில் மனுதாரரை இணைக்க உத்தரவு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரையும் குழுவில்

Updated On :8 ஜனவரி 2021, 4:59 am

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கில், மனுதாரரையும் குழுவில் இணைக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 14 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து சமூகத்தினரும் அடங்கிய விழாக் குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும் என அவனியாபுரத்தைச் சோ்ந்த முனியசாமி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது. எனவே மனுதாரரையும் விழாக் குழுவில் இணைக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.