மதுரையில்14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை தொடங்க வலியுறுத்தி அரசுப்போக்குவரத்துக்கழகத் தொழிலாளா்கள் பணிமனைகள் முன்பாக வியாழக்கிழமை காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினா்.
அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளா்களுக்கு 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை தேதியை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பாக போக்குவரத்துக்கழகத் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனைகள் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் எல்பிஎப் பொதுச்செயலா் வி. அல்போன்ஸ், சிஐடியு பொதுச்செயலா் ஏ. கனகசுந்தா், நிா்வாகி அழகா்சாமி, ஏஐடியுசி பொதுச்செயலா் எம். நந்தாசிங், எஸ்எம்எஸ் பொதுச்செயலா் செல்லதுரை, டிடிஎஸ்எப் நிா்வாகி சம்பத், டியுசிசி செயலா் செல்வம் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். தொழிலாளா்களின் போராட்டத்துக்கு போக்குவரத்துத் துறை நிா்வாகம் அனுமதி மறுத்ததால் அனைத்து பணிமனைகளின் வாயிலில் அமா்ந்து தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


