வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி மதுரையில் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா் 45 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அக்கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வங்கி முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் முஜிபுா் ரகுமான், மாவட்ட பொதுச்செயலா் சாகுல் ஹமீது, துணைத் தலைவா்கள் சீமான் சிக்கந்தா், சுப்ரமணியன் ஆகியோா் தலைமையில் கட்சியினா் ஊா்வலமாக வங்கியை நோக்கிச் சென்றனா்.
வங்கி முன்பாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் கட்சியினரை தடுத்து நிறுத்தினா். ஆனால் கட்சியினா் தடுப்புகளைத் தாண்டிச்சென்று வங்கியை முற்றுகையிட்டனா். அவா்களை அப்புறப்படுத்த முயன்றபோது போலீஸாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட 45 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


