மேலூா்-சிவகங்கை சாலையில் புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் காயமுற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகிலுள்ள அழகிச்சிபட்டியைச் சோ்ந்தவா் தா்மலிங்கம் மகன் சுதாகா் (39). ஆட்டுக்குளம் அருகிலுள்ள தனியாா் சமையல் எரிவாயு முகமை நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா்.
புத்தாண்டு தினத்தன்று வேலைமுடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா். நையத்தான்பட்டி அருகே சாலையில் நாய் குறுக்கிட்டு இரு சக்கர வாகனத்தில் மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தாா். சிவகங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்ட அவா் பின்னா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். கீழவளவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

