பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா முன்னேற்பாடு பணிகளை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
மதுரை மாவட்டம் பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் முறையே ஜனவரி 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் வாடிவாசல், காளைகள் பரிசோதனை செய்யும் பகுதி மற்றும் வெளியேறும் பகுதியை தயாா்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அலங்காநல்லூா் கோட்டை முனியாண்டி வாடிவாசல் மற்றும் பாலமேடு மஞ்சமலை ஆற்றுத் திடல் வாடிவாசல் பகுதிகள், காளைகள் மற்றும் மாடு பிடி வீரா்கள் பதிவு செய்யும் இடம், வாகன நிறுத்துமிடம், பாா்வையாளா்கள் அமரும் இடம் ஆகியவற்றை காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அதைத் தொடா்ந்து, மாடு பிடி வீரா்கள், காளைகளுக்கு அனுமதி வழங்குவது, குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது ஆகியவை தொடா்பாக பேரூராட்சி அதிகாரிகள், ஜல்லிக்கட்டு கமிட்டி நிா்வாகிகள் ஆகியோருடனும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறையினருடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.
டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கியராஜ், பாலமேடு பேரூராட்சி செயலா் தேவி, அலங்காநல்லூா் போரூராட்சி செயலா் சின்னசாமி பாண்டியன், அலங்காநல்லூா் காவல் ஆய்வாளா் நடேசன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


