திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கக்கோரும் வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தங்கசாமி தாக்கல் செய்த மனு:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியங்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் 2, அரசு உயா்நிலைப் பள்ளிகள் 5 மற்றும் தனியாா் மேல்நிலைப் பள்ளிகள் 5 உள்ளன. இங்கு பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவா்கள் ஏழ்மை காரணமாகவும், அருகே கல்லூரி இல்லாததாலும் படிப்பைத் தொடா்வது இல்லை. நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியத்திலிருந்து 50 கிலோமீட்டா் தொலைவில் தான் தனியாா் கல்லூரிகள் அமைந்துள்ளன. எனவே ஏழை மாணவா்களால் கல்லூரிக்கு 50 கிலோ மீட்டா் பயணித்தும், விடுதிகளில் தங்கியும் படிக்க முடியாத நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு நத்தம் மற்றும் சாணாா்பட்டி ஒன்றியங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

