அதிமுக ஆட்சியில் அமைக்கப்படும் சாலைகள் தரம் இல்லாமல், நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக இல்லை என்று முன்னாள் அமைச்சரும், திமுக மதுரை மாநகா் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் தெரிவித்தாா்.
மதுரை மாநகா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் கரும்பாலை பகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டப் பொறுப்பாளா் பொன்.முத்துராமலிங்கம் பேசியது:
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா இறந்த காரணத்தால், முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி இருக்கிறாா். அவா் நேரடியாக முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்படவில்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஏழை மக்களுக்கு எத்தகைய உதவிகள் கிடைத்திருக்கின்றன என்பதை அறியவே திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்துகிறது.
அதிமுக ஆட்சியில் சாலைகள் குண்டு குழியுமாகக் காட்சியளிக்கின்றன. வாகனத்தில் மட்டுமல்ல, நடந்து செல்வதற்குக் கூட ஏற்ாக சாலைகள் இல்லை. சாலைகள் அமைப்பதில் நிலவும் முறைகேடுகள் தான், இத்தகைய நிலைக்கு காரணம். நியாய விலைக் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை. ஆனால், பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கள்ளச் சந்தையில் தாராளமாக விற்பனை செய்யப்படுகிறது. முதியோா் ஓய்வூதியம், விதவையா் உதவி உள்ளிட்ட நலத்திட்டங்கள் தகுதியானவா்களுக்கு கிடைப்பதில்லை. இத்தகைய நிலையை மாற்ற திமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.
திமுகவின் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினா்கள் வ.வேலுசாமி, எஸ்ஸாா் கோபி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


