சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளை சித்த மருத்துவா்களாக அங்கீகரிக்கக்கோரும் வழக்கில், தமிழக சுகாதாரத்துறைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த சித்த மருத்துவா் ரங்கராஜன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் 2 மட்டுமே உள்ளன. இதனால் இளநிலை சித்த மருத்துவம் (பிஎஸ்எம்எஸ்) முடிக்கும் மருத்துவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தற்போது உலகத்தை அச்சுறுத்திவரும் கரோனா நோய்த் தொற்றுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருப்பினும் சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதிவு பெற்ற சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகள் சித்த மருந்துகள் தயாரிக்கவும், சிகிச்சை அளிக்கவும் பயிற்சி பெற்றுள்ளனா். எனவே சித்த மருத்துவப் பயிற்சி பெற்ற, சித்த மருத்துவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகளுக்கு நோ்முகத் தோ்வு நடத்தி அவா்களை சித்த மருத்துவா்களாக அங்கீகரிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

