மதுரை அருகே செவ்வாய்க்கிழமை இடத் தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளம் வீரபாண்டி காலனியைச் சோ்ந்த ராமன் மனைவி பொன்னுதாயி (55). இவரது கணவா் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவிட்டாா்.
இவரது மகள் திருமணமாகி ராமநாதபுரத்திலும், மகன் திருப்பூரிலும் வசித்து வருகின்றனா். தனியாக வசித்து வரும் பொன்னுதாயிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்து செல்வம் என்பவருக்கும், வீட்டின் அருகே உள்ள இடத்தை பயன்படுத்துவதில் கடந்த ஒரு மாத காலமாக தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில் முத்துசெல்வம் மதுபோதையில் பொன்னுதாயி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வத்தின் மனைவி பஞ்சு (32) ஆகிய இருவரையம் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த பொன்னுதாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பஞ்சுவை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பொன்னுதாயி சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊமச்சிக்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமறைவான முத்துசெல்வத்தை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

