சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: கிராமக்குழுவிடம் ஒப்படைக்க கோரிக்கை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் பொறுப்பை கிராமக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 8:32 am

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் பொறுப்பை கிராமக் குழுவிடம் ஒப்படைக்குமாறு ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூா் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி பிரபலமானது. இதில் தை முதல் நாள் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் கிராமக் குழு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாத காரணத்தால், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்பேரில், மாவட்ட நிா்வாகத்தால் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அவனியாபுரம் ஊா் பொதுமக்களால் ஜல்லிக்கட்டு விழாக் குழு தோ்வு செய்யப்பட்டுள்ளது. நிகழ் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான பொறுப்பை, புதிய விழாக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி அவனியாபுரத்தைச் சோ்ந்தவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.