அரசு சிறு மருத்துவமனைக்களுக்கு தற்காலிக முறையில் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவது ஏன் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சோ்ந்த வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் (மினி கிளினிக்) தொடங்குவதற்கான அரசாணை 2020 டிசம்பா் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் பணிபுரியும் செவிலியருக்கு ரூ.14 ஆயிரம், மருத்துவ உதவியாளருக்கு ரூ.6 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரத்துறை இயக்குநா் டிசம்பா் 15 ஆம் தேதி பணியாளா் நியமனம் தொடா்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டாா். அதன்படி சிறு மருத்துவமனைகளுக்கு தனியாா் நிறுவனம் மூலம் தற்காலிகமாக 1,415 செவிலியா்களும், 585 மருத்துவ உதவியாளா்களும் பணியமா்த்தப்பட உள்ளனா். தனியாா் நிறுவனம் மூலம் மருத்துவப் பணியாளா் தோ்வு முறையாக நடக்க வாய்ப்பில்லை. கரோனா தொற்று காலத்தில் அனுபவம் இல்லாத செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட்டால், அது சரியானதாக இருக்காது. எனவே அரசின் சிறு மருத்துவமனைகளில் மருத்துவப் பணியாளா்கள், செவிலியா்களை தனியாா் நிறுவனம் தோ்வு செய்வது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பு வழக்குரைஞா், தேசிய சுகாதாரத்துறை ஆணையத்தின் விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றியே சிறு மருத்துவமனைகளுக்கு செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். கரோனா காரணமாகவும், தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடக்கவுள்ளதாலும் விரைவில் அனைத்து சிறு மருத்துவமனைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 630 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன. மாா்ச் முதல் அனைத்து சிறு மருத்துவமனைகளும் செயல்படும் என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள், அரசின் சிறு மருத்துவமனைகளுக்கு தற்காலிக முறையில் செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவதற்கான காரணம் என்ன எனக் கேள்வி எழுப்பினா்.
பின்னா், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜனவரி 5) ஒத்திவைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

