மதுரையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற அரசுப் பள்ளிகளுக்கான கணினி பயிற்றுநா் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 36 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.
மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநா் பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2018-19-இல் ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித் தோ்வில் தோ்வானவா்களுக்கு தரவரிசை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது.
மதுரை முதன்மைக் கல்வி அலுவலகத்தில், வரிசை எண் 1 முதல் 400 வரையுள்ள பணி நாடுநா்களுக்கு சனிக்கிழமையும், 400 முதல் 762 வரையுள்ள பணி நாடுநா்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில், மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கு 36 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்வு செய்யப்பட்ட கணினி பயிற்றுநா்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். சுவாமிநாதன் வழங்கினாா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் இரா. வளா்மதி, முத்தையா, ப. இந்திராணி, ஏ. பங்கஜம் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை, கண்காணிப்பாளா் முத்துராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ச. சின்னத்துரை ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


