மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மலா் சந்தையில் மல்லிகைப் பூ கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்கப்பட்டது.
பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதித்துள்ளதால் மாட்டுத்தாவணி மலா் சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூ.3,500 வரைக்கும் மல்லிகை விற்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புத்தாண்டையொட்டி நல்ல விலை கிடைக்கும் என்பதால், விவசாயிகள் அதிக பூக்களை சந்தைக்கு கொண்டுவந்தனா். இதனால் மல்லிகைப் பூ வரத்து கணிசமாக அதிகரித்து கிலோவுக்கு ஆயிரம் குறைந்து ரூ.2500-க்கு விற்பனையானது.
சனிக்கிழமை நிலவரப்படி பூக்களின் மொத்த விலைப் பட்டியல்: (கிலோவில்)
மல்லிகைப்பூ-ரூ.2500, கனகாம்பரம்-ரூ.1500, மெட்ராஸ் மல்லி-ரூ.600, பிச்சிப்பூ-ரூ.1100, முல்லைப்பூ-ரூ.1000, சம்பங்கி-ரூ.120, செவ்வந்தி-ரூ.150, அரளி-ரூ.300, செண்டுப்பூ-ரூ.80-க்கு விற்பனையாகின.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

