உசிலம்பட்டி: 58 கிராம கால்வாய் தண்ணீா் திறக்க நிரந்தர அரசாணை வெளியிட வலியுறுத்தி உசிலம்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை தெருமுனைக் கூட்டம் நடத்தினா்.
உசிலம்பட்டி-தேனி சாலையில் உள்ள முருகன் கோயில் அருகே நடைபெற்ற கூட்டத்துக்கு அக்கட்சியின் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநிலத் துணைச் செயலாளா் தென்னரசு தலைமை வகித்தாா். தொழிலாளா் விவசாய முன்னணி மாவட்ட அமைப்பாளா் கருப்பையா, விவசாயிகள் பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் மு.பால்பாண்டி, சோ. ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளா் வே. கனியமுதன், மதுரை தெற்கு மாவட்டச் செயலாளா் வி.பி.இன்குலாப் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
58 கிராம கால்வாயில் ஆண்டுதோறும் தண்ணீா் திறக்கவும், வைகை அணையில் 60 அடிக்கு தண்ணீா் வந்தவுடன் 58 கிராம கால்வாயில் தண்ணீா் திறக்க நிரந்தர அரசாணை பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு வலியறுத்தப்பட்டது.
கட்சியின் உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளா் பழனிச்சாமி, நகரச் செயலாளா் விடுதலை மாரி, தொகுதி அமைப்பாளா் கோ. சின்னச்சாமி, 58 கிராம கால்வாய் பாசன சங்க தலைவா் ஜெயராஜ், சிவப்பிரகாசம், இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி தங்கமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


