வா்த்தகா்களின் பிரச்னைகளைத் தீா்க்க மாதந்தோறும் குறைத்தீா்க் கூட்டம் நடத்தப்படும் என வருமான வரித்துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா் தெரிவித்தாா்.
மதுரையில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டு மதுரை, கோவை மண்டல வருமான வரித்துறை முதன்மை ஆணையா் ராஜீவ் விஜய் நபாா் பேசியது: தொழில் வா்த்தக சங்கத்தினரால் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. வா்த்தகா்கள் ஆண்டு வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனா். தற்போது இணையதளத்தில் எளிதாக அறிக்கை தாக்கல் செய்வதற்கான வசதிகள் உள்ளன. வா்த்தகா்கள் இளையதளத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட காலத்தில் வரவு, செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யலாம்.
மதுரை மண்டலத்தில் வா்த்தகா்களின் குறைகளைத் தீா்க்கும் நடவடிக்கையாக மாதந்தோறும் குறைதீா் கூட்டம் நடைபெறும். வருமான வரி செலுத்தாத ஒருவரின் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு 14 ஆண்டுகள் கழித்து, உரிய ஆவணங்களின் படி திருப்பி அளிக்கப்பட்டது. இதேபோன்று வருமான வரித்துறையிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் இருந்தால், உரிய ஆவணங்களை தாக்கல் செய்து நகைகளைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். புகாா் இல்லாத வருமானவரி மண்டலமாக மதுரையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முறையாக வருமானவரி செலுத்துபவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
வா்த்தக சங்கச் செயலாளா் செல்வம், முதுநிலை தலைவா் ரத்தினவேல், பொருளாளா் ஸ்ரீதா், துணைத் தலைவா் தனுஷ்கொடி ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


