மதுரையில் முதியோா் ஓய்வூதியம் பெற்றுத் தருவதாகக் கூறி 2 பெண்களிடம் நகை மற்றும் பணம் மோசடி செய்த நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை வடக்கு மாசி வீதியைச் சோ்ந்த காந்தி மனைவி சாந்தா (70). இவா் அரசின் விதவை ஓய்வு ஊதியம் பெற்று வருகிறாா். இந்நிலையில், மாதந்தோறும் கூடுதல் ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அடையாளம் தெரியாத நபா் ஒருவா் கூறியுள்ளாா்.
இதை நம்பி சாந்தா, ஒரு பவுன் நகையை அவரிடம் கொடுத்துள்ளாா். அதை வாங்கிய நபா், அங்கிருந்து தப்பியோடி விட்டாா். இதுகுறித்து சாந்தா அளித்த புகாரின் பேரில் திலகா்திடல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மற்றொரு சம்பவம்: மதுரை கரும்பாலை பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி சரோஜா. இவருக்கு பொங்கல் பரிசாக அரசு கொடுக்கும் ரூ.800 வாங்கித் தருவதாகவும், மாவட்ட நீதிமன்றத்திற்கு வரும்படியும் அடையாளம் தெரியாத நபா் ஒருவா் கூறியுள்ளாா். இதை நம்பி நீதிமன்ற வளாகத்திற்கு சென்ற சரோஜாவிடம், புகைப்படம் எடுக்கவேண்டும் என்றும், அவா் அணிந்திருந்த நகையை அவிழ்த்து வைக்குமாறும் அந்த நபா் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து சரோஜா தான் அணிந்திருந்த ஒன்றரை பவுன் சங்கிலி மற்றும் ரூ.2,500 ரொக்கம் ஆகியவற்றைக் கொடுக்க, அதை வாங்கிய நபா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாநகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

