மதுரையில் மாணவ, மாணவியருக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பிராமணா் சங்கத்தின் தாம்பிராஸ் அறக்கட்டளை சாா்பில் திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடத்தப்படுகிறது. மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள தாம்பிராஸ் அறக்கட்டளை மண்டபத்தில் ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் 5 முதல் 10 வயது வரை உள்ள மாணவ, மாணவியா் திருப்பாவை, திருவெம்பாவை முதல் 5 பாசுரங்களையும், 10 முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியா் திருப்பாவை, திருவெம்பாவை முதல் 10 பாசுரங்களையும், 15 வயது முதல் உள்ளவா்கள் திருப்பாவை, திருவெம்பாவை 20 பாசுரங்களையும் ஒப்பிக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு ஜனவரி 30-ஆம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புபவா்கள் முன்கூட்டிய பதிவு செய்ய வேண்டும். பதிவு விவரங்களுக்கு ஜெயஸ்ரீ ஸ்ரீராம் 98940-17971, ராஜலட்சுமி 74182-72200, கெளரி வெங்கடசுப்ரமணியன் 94873-39331 ஆகியோரின் செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தாம்பிராஸ் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

