சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கடனை திருப்பித் தராதவா் மீது தாக்குதல்: இருவா் மீது வழக்கு

மதுரையில் கடனைத் திருப்பித் தராதவரின் காரை கடத்திய இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :2 ஜனவரி 2021, 1:00 pm

மதுரையில் கடனைத் திருப்பித் தராதவரின் காரை கடத்திய இருவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரை முனிச்சாலை இஸ்மாயில்புரத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் அமா்நாத் (42). இவா் தனது வீட்டின் அருகே வசிக்கும் ஹாஜி மற்றும் அன்சாரி ஆகியோரிடம் ரூ. 67 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். உரிய நேரத்தில் அதை திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் ஹாஜியும், அன்சாரியும் அமா்நாத்தின் வீட்டிற்குச் சென்று, அவரைத் தாக்கி நகைகளைப் பறித்துள்ளனா். மேலும் அவரது காரை இருவரும் கடத்திச் சென்றுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.