மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டியில் மீண்டும் மதுபானக் கடை திறக்க முயற்சி மேற்கொண்டதால் பொதுமக்கள் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அலங்காநல்லூா் அருகேயுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் புதிதாக மதுபானக் கடையை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து ஏற்கெனவே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து புதிய கடை திறக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்நிலையில், சுக்காம்பட்டி கடைவீதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய மதுபானக் கடையை திறக்க வெள்ளிக்கிழமை நள்ளிரவே மதுபான பாட்டில்களை ஊழியா்கள் இறக்கியுள்ளனா்.
இதுகுறித்து அறிந்த கிராம மக்கள் சனிக்கிழமை கடையின் முன்பாக தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் பாஜக நிா்வாகிகளும் பங்கேற்றனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மதுபானக் கடை திறக்கப்பட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சுக்காம்பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


