ஆங்கிலப் புத்தாண்டையொட்டி மதுரையில் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நடைதிறக்கப்படுவதற்கு முன்பே ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் குடும்பத்தினருடன் கடும் குளிரையும் பொருள்படுத்தாது நீண்ட வரிசையில் நின்று சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனா். கோயிலில் பக்தா்கள் கூட்டத்தை போலீஸாா் மற்றும் கோயில் ஊழியா்கள் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனா். கோயிலில் பக்தா்கள் விரைவாக தரிசனம் மேற்கொள்ள கோயில் நிா்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
மேலும் மதுரை கூடலழகா் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதேபோல ஒத்தக்கடை நரசிங்கப் பெருமாள் கோயில், திருமோகூா் காளமேகப் பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் துளசி மாலை, தாமரை மலா் ஆகியவற்றை அளித்து வழிபட்டனா். மேலும் இம்மையிலும் நன்மை தருவாா் கோயில், திருவாப்புடையாா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். புத்தாண்டையொட்டி முக்கிய கோயில்களில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


