மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஒட்டகம் மீனாட்சி உடல் நலக் குறைவால் புதன்கிழமை இறந்தது.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. மூத்த பெண் ஒட்டகம் மீனாட்சியும், இளைய ஒட்டகம் சிவாவும் கோயில் திருவிழாக்களின்போது மாசி மற்றும் ஆவணி மூல வீதிகளில் சுவாமி உலா வரும் நிகழ்ச்சியின் அலங்கரிக்கப்பட்டு, பவனி வருவது வழக்கமாகும். ஆவணி மூலத் திருவிழாவில் கூட இரு ஒட்டகங்களும் சுவாமி, அம்மன் உலா நிகழ்ச்சிகளில் வலம் வந்தன. இந்த நிலையில், மூத்த ஒட்டகம் மீனாட்சிக்கு கடந்த சில நாள்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, மதுரை அரசு கால்நடை மருத்துவர்கள் கலைவாணன், செந்தில்குமார் ஆகியோர் சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை காலை ஒட்டகம் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். வலையங்குளம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் ஒட்டகம் நல்லடக்கம் செய்யப்படுமென திருக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

