சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பக்தர்கள் சமமாக தரிசிக்க நடவடிக்கை

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இலவசம், கட்டண டிக்கெட் எடுத்தவர்கள் என அனைத்து

Updated On :22 ஆகஸ்ட் 2013, 5:16 pm

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இலவசம், கட்டண டிக்கெட் எடுத்தவர்கள் என அனைத்து பக்தர்களும் அம்மன் சன்னிதியில் ஒரே இடத்தில் சமமாகத் தரிசிக்கும் முறை செவ்வாய்க்கிழமை முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது.

     அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் இலவசமாகவே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், பக்தர்களின் வசதிக்காக ரூ.20, ரூ.100 கட்டண முறையும் செயல்படுத்தப்பட்டுள்ளது. கட்டண முறையில் தரிசிக்கவரும் பக்தர்கள் அம்மன் சன்னிதியில் இடது, வலது பக்கத்தில் இரு பிரிவாக அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், முக்கிய விருந்தினர்கள் தனியாக நின்று தரிசிக்கும் வசதியும் இருந்தது.

  இந்த நிலையில், அனைத்துப் பக்தர்களும் ஒரே இடத்தில் நின்று அம்மனை அருகில் தரிசிக்கும் வகையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கட்டண தரிசனத்துக்கு வருவோரும், சிறப்பு விருந்தினர்களும் விரைந்து செல்லும் வகையில் வழிகள் இருந்தாலும், அம்மன் தரிசனத்தின்போது அவர்கள் பொது பாதையில் நின்றே தரிசனம் செய்ய முடியும்.

   இப் புதிய முறை குறித்து திருக்கோயில் செயல் அலுவலரும், இணை ஆணையருமான பி.ஜெயராமனிடம் கேட்டபோது,  இறைவன் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தற்போது அனைத்துப் பக்தர்களும் ஒரே இடத்தில் நிóன்று தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டண அடிப்படையில் தரிசிக்க வருவோர் விரைவாகச் சென்றாலும் பொதுவான இடத்தில் நின்றே தரிசிக்க முடியும் என்றார். 

 புதிய தரிசன முறையானது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.