வாடிப்பட்டி மற்றும் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்த ஆட்சியர், அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டார். வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், செம்மினிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட கட்டுமானப் பணி, பசுமை வீடுகள் திட்ட கட்டுமானப் பணி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.வி.கருப்பையா, சோழவந்தான் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் அன்னக்களஞ்சியம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் கே.வி.வி.சி. குலோத்துங்கன், வட்டாட்சியர்கள் உஷா, கே.குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

