சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

‘கேரளத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை’: மத்திய அமைச்சர்

கேரள மாநிலத்தில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான வி.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image

மத்திய அமைச்சர் வி.முரளீதரன்

Updated On :15 ஜனவரி 2021, 2:38 am

கேரள மாநிலத்தில் கரோனா பரவலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மத்திய அமைச்சரும், மாநில பாஜக தலைவருமான வி.முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டில் பல மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கேரளத்தில் அதிகரித்து வருகின்றது.

இதுகுறித்து கேரள பாஜக தலைவர் கூறியதாவது,

கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகின்றது. மாநில அரசு தொற்று பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை. தற்போது கரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள் உள்பட பல துறைகளை அரசு திறந்து வருகின்றது. மாநில அரசு எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

கேரளத்தில் இதுவரை 8,31,260 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 3,392 பேர் பலியாகியுள்ளனர்.