வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக திங்கள்கிழமை மக்களின் இயல்புவாழ்ககையில் பாதிப்பு ஏற்பட்டது.
வேதாரண்யம் பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழைப் பொழி ஏற்பட்டு வந்தது.
திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 33 மி.மீட்டரும், தலைஞாயிறில் 11.8 மி.மீட்டரும் மழை பதிவானது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் தொடர்ந்த கனமழை தொடர்ந்து வருகிறது. காலை 8 மணி முதல் 6 மணிவரையில் வேதாரண்யத்தில் 127.4 மி.மீட்டரும், தலைஞாயிறில் 80 .5 மி.மீட்டரும் மழை பதிவானது.
கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர் சாகுபடி வயல்களில் தண்ணீர் வடியாது இருந்த நிலையில் தற்போது கொட்டி தீர்த்து வரும் மழையால் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மகாராஜபுரம், கரியாப்பட்டினம், வாய்மேடு, தகட்டூர், மருதூர், தென்னடார் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரக உள்ள நெல் வயல்களை வெள்ள நீர் சூழ்நது, கதிர்களை பாதிக்கச்செய்துள்ளது.
நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து வருகிறது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்ததால் பொங்கல் பண்டிகைக்கு பொது மக்கள் பொருள்களை வாங்கச்செல்வது பாதிக்கப்பட்டது
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


