சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸோபியானில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

Updated On :11 செப்டம்பர் 2013, 10:40 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸோபியானில் இன்று போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முகாம் மீது நடந்த தாக்குதலை அடுத்து ஏற்பட்ட மோதலை தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர்.

4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று ஸோபியானில்  போராட்டம் நடத்தியவர்களை நோக்கி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்ததை அடுத்து பதற்றம் ஏற்பட்டதால் அந்த மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக இருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலையில்தான் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.