சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வேடசந்தூர் : குடகனாறு அணையில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

Updated On :11 செப்டம்பர் 2013, 3:47 pm

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு அணையின் உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்றை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

குடகனாறு அணையில் தண்ணீர் இல்லாமல் இருந்த  உட்பகுதியில் எலும்புக் கூடு ஒன்று இருப்பதை அப்பகுதியில் மாடு மேய்க்க வந்தவர்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, இதுவரை காணாமல் போனவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த 2011ஆம் ஆண்டு காணாமல் போன பாலப்பட்டி கிராமம் நாச்சிமுத்துவின் மகள் நித்யா (16) என்பது தெரிய வந்துள்ளது. எலும்புக் கூடு மீதிருந்த ஆடையை அடையாளமாக வைத்து, அவரது பெற்றோர், அது தனது மகள் நித்யா, காணாமல் போன அன்று அணிந்திருந்த ஆடை என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, எலும்புக் கூடை தடயவியல் நிபுணர்கள் சேகரித்து சென்னை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.