சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராகுல் காந்தியின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்: ஷிண்டே

2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்தர் மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 11:54 pm

யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்தர் மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை தில்லியில் கூடி முடிவு எடுக்கவுள்ளது. இந்நிலையில் நரேந்தர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறிய மற்றும் பெரிய கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளராக ராமு, ஷாமு என்று யாரை வேண்டுமானலும்  அறிவிக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரை துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.