சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேருக்கு மூன்று ஆண்டு சிறை

சென்னையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2.7.2008-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் டேராடூன் விரைவு ரயிலில் கஞ்சா

Updated On :12 செப்டம்பர் 2013, 12:18 am

ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 3 பேருக்கு, சென்னைஉயர்நீதி மன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

சென்னையில் உள்ள போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2.7.2008-ஆம் தேதி ரோந்து சென்றனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வரும் டேராடூன் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருவெற்றியூர் ரயில் நிலையத்திற்குச் சென்று போலீஸார் ஆய்வு செய்தனர்.அப்போது 64 கிலோ அளவில் கஞ்சா கடத்திக்கொண்டு அந்த ரயிலில் வந்து இறங்கிய சென்னையைச் சேர்ந்த பாண்டியராஜன்(32),சேதுராமன்(31),ஜெயப்பிரகாஷ்(19) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நீதிபதி வி.ராமமூர்த்தி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி,கஞ்சா கடத்திய பாண்டியராஜன்,சேதுராமன்,ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும்,தலா ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து,புதன் கிழமை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் டி.கண்ணன் ஆஜரானார்.