சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி மாணவி பாலியல் வழக்கு: வெள்ளிக்கிழமை தீர்ப்பு

தில்லி மருத்துவ மாணவி பாலியல் வழக்கு விவாதம் இன்று காலை முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (செப்.13) மதியம் 2.30க்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 8:13 pm

தில்லி மருத்துவ மாணவி பாலியல் வழக்கு விவாதம் இன்று காலை முதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் தீர்ப்பு இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பு வரும் வெள்ளிக்கிழமை (செப்.13) மதியம் 2.30க்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சாகேத் விரைவு நீதிமன்றத்தில் இன்று, குற்றம்சாட்டப்பட்ட முகேஷ் சிங், அக்சய் தாகுர், வினய் சர்மா, பவன் குப்தா ஆகிய 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று செவ்வாயன்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை குறித்து இறுதி விசாரணை நடைபெற்றது.

இதையடுத்து தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.