சென்னையில் தலைமறைவாக இருந்த இரு ரௌடிகள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு மாம்பலம் மூர்த்தித் தெருவைச் சேர்ந்தவர் மா. சேகர் என்ற ஆட்டோ சேகர் (45). மேற்கு மாம்பலம் புஷ்பவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சு. சிவா (39. இவர்கள் இருவர் மீதும் அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சேகர் மீது அசோக்நகர், கோட்டூர்புரம் காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இதேபோல சிவா மீதும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருவரும் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரௌடிகள் கண்காணிக்கும் பிரிவு போலீஸார் தலைமறைவாக இருந்த இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். பின்னர் போலீஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

