சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் குள்ளன் தெருவில் வசிப்பவர் மு. மகன் சதீஷ் (22). இவர் மீது அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி, தங்கச் சங்கிலி பறிப்பு, கொலை மிரட்டல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ், அச் சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

