மெட்ராஸ் கஃபே திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மயிலாப்பூரில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்து நடித்தும இருக்கும் திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இந்த திரைப்படம் இலங்கையில் நடைபெற்ற ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக தமிழ் இயக்கங்கள் கூறி வருகின்றன. மேலும் இந்த திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என தமிழ் இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தமிழ் ஈழ மாணவர் கூட்டமைப்பினர் மயிலாப்பூர் லஸ் பகுதியில் இன்று சாலை மறியல் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதைப் பார்த்த போலீஸார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்தனர்.
முன்னதாக இந்தப் போராட்டத்துக்கு சிபி லட்சுமணன் தலைமை வகித்தார். இப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

