கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளின் தரம் குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு ஆய்வு செய்து கூடுதல் கடைகள் திறக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு, கூட்டுறவுத்துறை மூலம் 31 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் தமிழக முதல்வரால் கடந்த 20.6.2013 அன்று திறக்கப்பட்டு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மேலும் பெருக்குவதற்கு வேண்டி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ இன்று (22.8.2013) கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு நேரில் சென்று பண்ணைப் பசுமை கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் காய்கறிகளின் தரத்தையும், அதன் வகைகளையும், விற்பனை விலையையும் கேட்டறிந்தார்.
பின்னர் பண்ணைப் பசுமை காய்கறி கடைகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் பொருத்தவரை, ராயக்கோட்டை, பாகனூர், பேரிகை, சத்திரபட்டி ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விவசாயிகளிடம் நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 296.709 டன் கொள்முதல் செய்யப்பட்டு அதன் மதிப்பு ரூ.65.41 இலட்சம் ஆகும். தற்போது காய்கறி விற்பனை அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு சராசரியாக 2 அல்லது 3 டன் கொள்ளளவு கொண்ட காய்கறிகள் கொள்முதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இதனால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் பெரும் பயனடைகின்றனர்.
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளுக்கு தேவையான காய்கறிகளை விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருவதால் 10 சதவிகிதம் இடைத்தரகருக்கான கமிஷன் வழங்காததால் விவசாயிகள் பெரும் இலாபம் ஈட்டுவதுடன் போக்குவரத்து செலவினமும் விவசாயிகளுக்கு மிச்சமாகிறது.
பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் 21.8.2013 வரை 1,157.988 டன் விற்பனை செய்யப்பட்டு அதன் மதிப்பு ரூ.3,07,30,801/- விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

