நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி பாஜக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இன்று காலை மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 11 மணிக்கு அவை மீண்டும் கூடிய போதும், பாஜக உறுப்பினர் ரவி ஷங்கர் பிரசாத், காணாமல் போன ஆவணங்களை தேடவும், அது குறித்து விசாரணை நடத்தவும் பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும் என்று கோஷமிட்டார்.
கேள்வி நேரத்தை நடத்த அனுமதிக்குமாறு அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கோரிக்கை விடுத்தும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷமெழுப்பிக் கொண்டே இருந்தனர்.
இதே நிலைதான் மக்களவையிலும் நீடித்தது. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற பாஜகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியதால், அவை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

