சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னையில் அரசு பஸ் நடத்துநர் மாயம்

சென்னையில் அரசு பஸ் நடத்துநர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:44 pm

சென்னையில் அரசு பஸ் நடத்துநர் காணாமல்போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மண்ணூர் பேட்டை முகப்பேர் சாலையில் வசித்தவர் ரா. மகன் சியாம்ராஜாசிங் (50). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பெரம்பூர் பணிமனையில் நடத்துனராக வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் ராஜாசிங் கடந்த மாதம் 7ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால் அவர் மனைவி குளோரி தங்கம் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புதன்கிழமை புகார் அளித்தார்.

அப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.