சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

போலீஸ் அனுமதியின்றி சென்ற 2 வேன் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சிக்கலில் தமிழக முன்னேற்ற கழக பொது செயலர் கணேச பாண்டியன் மனைவு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, வாடகை வாகனங்களில் யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது

Updated On :11 ஆகஸ்ட் 2013, 11:50 pm

போலீஸ் அனுமதி பெறாமல் வேன்களை ஏற்றி்ச சென்ற சம்பவத்தி்ல 2 ஓட்டுனர்களை, போலீஸார், கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே சிக்கலில் தமிழக முன்னேற்ற கழக பொது செயலர் கணேச பாண்டியன் மனைவு நினைவு நாள் நிகழ்ச்சிக்கு, வாடகை வாகனங்களில் யாரையும் ஏற்றிச் செல்லக்கூடாது என்று போலீஸார் தடை விதித்திருந்தனர். ஆனால் வடக்கு மல்லல் என்ற ஊரைச் சேர்ந்த உலகம்மாள் என்பவரது வேனில் சிக்கலுக்கு ஆட்களை, வேன் ஓட்டுனர் முனியாண்டி மகன் பால்பாண்டி ஏற்றிச் சென்றாராம்.  இதே போன்று முதுகுளத்தூர்-மீனாட்சிபுரத்தை சேர்ந்த பிரபாகர் மகன் ஓட்டுனர் பாபு, சிலரை வேனில் சிக்கலுக்கு ஏற்றிச்சென்றாராம்.

போலீஸ் அனுமதி பெறாமலும், சாதி ஒற்றுமைக்கு பாதகம் விளைவிக்கும் வகையிலும், வாகன சட்ட விதிமுறைகளை மீறியும் வேன் ஓட்டிச் சென்றதாக இருவரையும் கைது செய்யும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என். மயில் வாகணன் உத்தரவிட்டார். இதையடுத்து ஓட்டுனர் பால்பாண்டியை ஏர்வாடி தருகா காவல் நிலைய ஆய்வாளர் முத்து ராஜாவும், பாபுவை முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் ஜேசுவும் கைது செய்தனர். இருவரும் முதுகுளத்தூர் மற் றும் ராமநாதபுரம் ஆகிய நீதி மன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.