இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் களமிறங்கி 42.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்கள் எடுத்துள்ளது.
பூவா தலையா வென்ற இந்தியா, பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து ஜிம்பாப்வே அணி வீரர்கள் களமிறங்கினர். அடுத்தடுத்து சொற்ப ரன்களிலேயே ஜிம்பாப்வே அணி வீரர்கள் ஆட்டமிழக்க, 42.4வது ஓவரில் ஜிம்பாப்வே 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஜிம்பாப்வே அணி சாரபில் சிகும்புரா மட்டுமே 66 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். துவக்க வீரர் சிபன்டா 45 பந்துகளில் 24 ரன்களை எடுத்தார்.
இந்தியா தரப்பில் மிஷ்ரா 3 விக்கெட்டுகளையும், ஷர்மா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஜிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, ஏற்கனவே நடைபெற்ற 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிவிட்டது.
இந்த நிலையில், 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு அடுத்து களமிறங்க உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

