ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 242 எம்.பி.க்கள் உள்ளனர். அவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கும் மொத்தமுள்ள இடங்களில் பாதி இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி மேலவைக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் சில சுற்று நிலவரங்கள் இன்று அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், பிரதமர் ஷின்சோ அபே அதிக வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் அவரது சுதந்திர ஜனநாயகக் கட்சிக்கு அதிக இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
தேர்தல் நடைபெற்ற 121 இடங்களில் அக்கட்சிக்கு 71 முதல் 80 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிய வருகிறது. இது ஆளுங்கட்சிக்கு மேலவையில் பலத்தைக் கொடுத்துள்ளது. ஏற்கெனவே கீழவையில் பெரும்பான்மை கொண்டுள்ள அக்கட்சிக்கு இது புதுத் தெம்பையும், அரசுக்கு ஸ்திரத்தன்மையையும் அளித்துள்ளது. இதனால், ஷின்சோ அபேவுக்கு முன் பிரதமராக குறுகிய காலமே இருந்த 6 பேருக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால் சட்டங்களை இயற்றுவதில் இருந்த தடை அவருக்கு இருக்காது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

