பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பொருளாதாரக் கொள் கை என்பதே கிடையாது என குற்றஞ்சாட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்.
திருவாரூரில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டியில்,
ஜூலை முதல் தேதி தில்லியில் இட துசாரிக் கட்சிகள், பார்வர்பிளாக் மற்றும் ஆர்எஸ்பி கட்சிகள் சார்பில் நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் நவீன பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மாற்றுப் பொருளாதாரக் கொள்கை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
2002-ல் பாஜக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முடி வெடுத்தது. 2006-ல் காங்கிரஸ் கட்சி 10 சதவீத பங்குகளை விற்க முயற்சி மேற் கொண்ட து. தொழிற்சங்கங்களின் போராட்டத்தால் நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்கு விற்பனை பின்னுக்குத் தள்ளப்பட்டது.
இடதுசாரிக் கட்சி தற்போது பிரகடனப்படுத்தியுள்ள மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை முன்வைத்து 2014 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்த மாற்றுப் பொருளாதார க் கொள்கையை மக்களிடத்தில் எடுத்துக் கூறும் வகையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கூட்டம், கருத்தரங்கம் என பல்வேறு வடிவங்களில் பிரசாரம் செய்கிறது.
நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்க முயற்சிக்கும் மத் திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் கடந்த ஒரு வார காலமாக போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் மின் உற்பத்தி பாதித்துள்ளது. எனவே பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்தாலோ அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்குவது தீர்வாக இருக் காது. தொழிற்சங்களின் முடிவுப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேஎண்டும். இப்பிரச்னை யில் சிபிஎம் தொழிற்சங்கங்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறது.
தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா, இளவரசனின் பிரச்னை சாதிவெறிக் கண்ணோட்டத்தில் அணுகியதாலே பிரச்னை பெரிதானது. இளவரசன் குடியிருப்புப் பகுதி உள்ளிட்டப் பகுதிகள் தீ வைத்து சூறையாடப்பட்டது, தி்வ்யாவின் தந்தை நாகராஜ், திவ்யா வின் கணவர் இளவரசன் ஆகியோரின் உயிரிழப்பும் சாதிவெறி கண்ணோட்டத்தில் ஏற்பட்ட பிரச்னையே காரணம். இப்பிரச்னையில் சிபிஐ விசாரணை தேவையென சிபிஎம் வலியுறுத்து கிறது.
டெல்டா மாவட்டம் உள்பட தமிழகம் முழுவதும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்கிறது. இத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளப்படி முழுமையான ஊதியம் மற்றும் வேலை கொடுக்க வேண்டும். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும்.
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு அவரசச் சட்டத்தால் 90 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று உத்திரவாதம் அளிக்கிறது. இத்திட்டத்தால் 67 சதவீதத்தினரே பயன்பெறுவார்கள் என்ற கருத்தை சிபிஎம் முன்வைக்கிறது. விரைவில் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இச்சட்டத்தை அவரசமாக ஏன் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். ரிலையன்ஸ் நிறுவனம் மத்திய அரசை மிரட்டுகிறது என்றார் ராமகிருஷ்ணன்.
பேட்டியின் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன், செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, பக்கிரிசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

