வேலூரில் இந்து முன்னணி அமைப்பின் தொண்டர் வெள்ளையப்பனைக் கொலை செய்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் ஆலோசகர் எஸ்.வேதாந்தம் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதில்,
வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்து சமுதாயத்திற்குப் பணிசெய்து வந்த இந்து முன்னணி இயக்கத்தின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு, தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத்தினர் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அடைந்தோம்.
தமிழக அரசு, இந்தப் படுபாதகக் கொலையைச் செய்த கொலையாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்திக் கடுமையான தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்று தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் கேட்டுக் கொள்கிறது.
வெள்ளையப்பனின் பிரிவு அவருடைய அன்புக் குடும்பத்தாருக்கு மட்டுமல்லாமல், இந்து சமுதாயத்திற்கும் பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எங்களுடைய இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். - என்று கூறியுள்ளார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

