சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது : கோயில் நிர்வாகி

சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Updated On :1 ஜூலை 2013, 8:08 pm

சார் தாம் யாத்திரையை ரத்து செய்யக் கூடாது என்று பத்ரிநாத் - கேதார்நாத் கோயில் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

உத்தர்கண்டில் வெள்ளம் பாதித்து பெரிய அளவில் சேதம் ஏற்பட்டள்ள பத்ரிநாத் - கேதார்நாத் கோயில்களுக்கு 3 ஆண்டுகளுக்கு யாத்திரை ரத்து செய்யப்படும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஆனால் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள கோயில் நிர்வாகி பி.டி. சிங், பக்தர்களை கோயிலுக்கு வராமல் இருக்கச் செய்வது மிகவும் கடினமானது. எனவே, யாத்திரையை ரத்து செய்வதை விடுத்து, பயணிகளின் வசதிக்காக மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். ஏன் எனில், அரசின் மொத்த வருவாயில் யாத்ரீகர்கள் மூலமாக 37 சதவீத வருவாய் கிடைக்கிறது. பத்ரிநாத்துக்கு வரும் சாலையை சரி செய்துவிட்டாலே, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஏராளமான பயணிகள் வருவார்கள் என்று கூறினார்.