உத்தர்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், அம் மாநிலத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரண உதவியை வழங்குவதாகவும் அறிவித்தார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
பருவ மழை காரணமாக வட

மாநிலங்களான உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டு, அதன் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணிய ஸ்தலங்களான கேத்ரிநாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி போன்ற இடங்களில் பெய்த பெரு மழையினால் கடும் நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக பெரும்பாலேனார் உயிரிழந்துள்ளனர். அதில் அதிக அளவில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்ற பக்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல நகரங்கள், கிராமங்கள் உருக்குலைந்துபோய் உள்ளன. அதை பார்க்கின்றபோது மிகப் பெரிய நில நடுக்கத்திலும், சுனாமியிலும் ஏற்பட்ட பாதிப்பு போல் உள்ளது. அதன் மூலம் பல கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் நாசமடைந்துள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் மீண்டு பழைய நிலைக்கு வருவதற்கு பல மாதங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது.
வெள்ள பாதிப்பினாலும், நிலச்சரிவாலும் தீவுகளுக்குள் சிக்கிய மனிதர்கள் போல் ஆயிரக்கணக்கானோர் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கு அந்த மாநில அரசும், மத்திய அரசும் போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தாலும், இன்னும் ஆயிரக் கணக்கானோர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். மேலும் இந்த இயற்கை சீற்ற பேரழிவில் இறந்தவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும் தே.மு.தி.க. சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இந்த இயற்கை பேரழிவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை காத்திடவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், அவர்களுக்கு உதவுகின்ற வகையில் எனது சார்பில் அந்த மாநிலத்திற்கு 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்குகின்றேன்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


