சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மீன்வளத் துறையை மேம்படுத்த நபார்டு வங்கி ரூ.10 கோடி நிதி

மீன் வள மேம்பாட்டு திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.10 கோடி நிதியளிக்க உள்ளது.

Updated On :11 ஜூன் 2013, 6:21 pm

மீன் வள மேம்பாட்டு திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.10 கோடி நிதியளிக்க உள்ளது.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி கூறியதாவது, மீன் வளத் துறைக்கு நபார்டு வங்கி அளிக்க உள்ள ரூ.10 கோடியை, பவானிசாகர் பகுதியில் மீன் வளர்ப்பு டேங்குகள் கட்ட பயன்படுத்தப்படும். ஏற்கனவே உள்ள மீன் டேங்குகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 300 டன் மீன்கள் கிடைக்கின்றன. ஜூன்-ஜூலை மாதங்களில் இந்த டேங்கில் ஜிலேபி, ரோகு, கட்லா போன்ற மீன் வகைகளை விடுவோம். பருவ மழை துவங்கி மழை நீர் கிடைத்ததும், இங்கு மீன்கள் நன்கு வளர்ந்து, அவை ஒப்பந்ததாரர்களுக்கு விடப்படும். ஏற்கனவே இதுபோன்ற சில டேங்குகள் பவானிசாகர் பகுதியில் உள்ளன. இந்த நிதியைக் கொண்டு மேலும் டேங்குகள் அமைப்பதன் மூலம், கிடைக்கும் மீன்களின் எண்ணிக்கையை 50 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மீன் வளத் துறை சார்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.