மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்டார்.
மந்தைவெளி சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேணுகோபால் (60). பூ வியாபாரியான அவர் நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மந்தைவெளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பரிசோதனை முடிவில் அவருக்கு காசநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனராம்.
இதனைக் கேட்டத்தில் இருந்து வேணுகோபால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவமனையின் 3-வது மாடிக்கு இன்று காலை சுமார் 7 மணியளவில் சென்ற வேணுகோபால், அங்கிருந்து கீழே குதித்து விட்டாராம்.இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்ட மருத்துவமனை ஊழியர்கள், அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

